Friday, August 15, 2014

கார் நாற்பது - 11



புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
     வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
     அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
     பூங்குலை யீன்ற புறவு.

குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடையவளே! மேனோக்கி எழும் பாம்பு எடுக்கும் படம் போல பொருந்திய வெண்காந்தள்கள் பூங்கொத்துகளை ஈன்ற  இம்மை மறுமையின்பங்கள் பொருந்துதலையுடைய காடுகள். பொருளை கொண்டுவர உன்னை பிரிந்து சென்ற தலைவர் இரைந்து திரும்புவதை கூறாமல் கூறி நிற்கின்றன.

(ஐம்பால் என கூந்தலைக் கூறுவது.. கூந்தல் ஐந்து பகுப்பினை உடையதைக் கூறுகிறது.அவை, கொண்டை,சுருள்,பனிச்சை,குழல்,முடி)

No comments:

Post a Comment