Monday, August 18, 2014

கார்நாற்பது- 14,15




 செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

விளங்காநின்ற அணிகளையுடையாய், முல்லைக்கொடிகள் விளங்குகின்ற ,மகளிரின் பற்களைப் போல அரும்பு ஈனும்வகை.
 நல்ல குளிர்ந்த மேகம் ,மெல்ல இனியவாக மின்னா நின்றன (ஆதலால்) பொருள் தேடிக் கொள்ள சென்ற நமது தலைவர் விரைந்து வருதலை தெளிய அறிந்ததாம்.



 திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர்
குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத்
திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி
இன்குழ லூதும் பொழுது.

திருந்திய அணிகளையுடையாய்! குருந்த மரத்தின் குவிந்த பூக்களின் உள்ளிடமே தமக்கு உறைவிடமாக இருந்து ,திருந்திய இனிய இளியென்னும் பண்ணை வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில் நம் தலவர் நீங்கியிருப்பார் அல்லர்.

No comments:

Post a Comment