Sunday, August 17, 2014

கார்நாற்பது - 12 - 13

  பாடல் - 12

மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்1
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.

உரை -

கருமையும் அழகும் பொருந்திய, மையுண்ட கண்களையுடைய , மயில் போலும் சாயலினியுடையாய், எண்ணெய் பூசப்பட்ட யானைகளைப்போல கரிய மேகங்கள், நாடோறும் வலமாக எழா நின்றன. (ஆகவே) ஐயந்தீர்ந்த அறிவினையுடைய நம் தலைவன் மீளவருதல் உண்மை.

  பாடல் - 13

 ஏந்தெழி லல்குலா யேமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி
ஒளிறுபு மின்னு மழை.

உரை-

 பருவமிகு அழகினையுடையாய்...தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினிது அழகுபோல மழை பெய்ய
அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியினையுடைய வாளினைப்போல கண்களைக் கவர்ந்து ஒளிவிட்டு மின்னா நின்றது...

No comments:

Post a Comment